(#ஊருழவாரம் - 26)
-------------------------------
என்னத்தை? எதைப் பறையிறது?
ஒரு சொல்லுப் பேச முடியாமல் நெஞ்சு பிடிக்குது. ம்…..,பேசிப் பேசி என்னத்தைக் காண முடிஞ்சுது? பழைய கதையளையும்,படங்களையும் பாக்கப் பாக்க பத்தியெரியுது நெஞ்சு. வீடு வராமலேயே போச்சுது, எங்கடை வெள்ளாமை. யாரைக் குற்றம் சொல்லிறது? இது தான் நடக்குமெண்டு எழுதியிருந்தா, அது தான் நடக்கும் கண்டியளோ! எங்கடை எங்கடை தலையிலை எழுதினதை, எப்பிடி நாங்க மாத்திறது? தர்மம்,நீதி வெல்லுமெண்டிறதெல்லாம், புராணங்களோடை போச்சுது. என்னவோ, எங்கடை இன சனமெல்லாம் இப்பிடி சீரழிஞ்சிட்டம். நாங்க பொத்திப் பொத்தி வளத்த கிளிக்குஞ்சுகளெல்லாம் சுதந்திரம்,விடுதலையெண்டு பறந்தழிஞ்சு போச்சு. நடந்த கதை நடந்த கதை தான்.
என்னத்தை இடிஞ்சு விழுந்தாலும், திரும்பத் திரும்ப கட்டியெழுப்பின சனம் நாங்கள். ஒரு நாள்ளை எல்லாம் கவிண்டு கொட்டிண்டு தலை கீழானாலும், அடுத்த நாள் நிமிர்ந்து நடக்க வைச்ச வாழ்க்கை தான் எங்கடை இத்தனை வருசத்து அனுபவம். எங்கை,என்ன சண்டை நடந்தாலும், அதுக்குள்ளை வாழப்பழகின சனம் நாங்கள். நாங்களே அழுது,நாங்களே துடைச்செண்டு, நாதியில்லையெண்டாலும் ஒண்டுக்கொண்டு உதவியாக ஓர்மத்தை விடாமல் வாழப் பழகினாக்கள் நாங்கள். பாதையைப் பூட்டிச் சாமானை மறிச்சாலென்ன? பங்கரை வெட்டி படுத்துக் கிடந்தாலென்ன? அரிக்கன் லாம்பிலை படிச்சு கம்பசுக்கு போனாலென்ன? எல்லாக் கஸ்ர நஸ்ரங்களையும் கண்டெழும்பி வந்தனாங்கள் நாங்கள்.
இனியும், எங்களாலை ஏலும். மனம் வைச்சா நல்லா முன்னேறி வரலாம். என்ன,ஒரு நாய்க்குணம். ஒற்றுமைப்பட மாட்டம் கண்டியளோ! அண்டைக்குத் தொடக்கம், இண்டைக்கு வரைக்கும் அது கொஞ்சம் எங்களுக்கு கஸ்ரமாத்தான் கிடக்கு. எங்களை மாதிரி திறமைசாலி இனத்துக்கு, அது ஒரு சாபக்கேடு மாதிரித் தொடருது. ”நாங்கள். எங்கடை மண். எங்கடை வாழ்க்கை” எண்டு, எல்லாரும் ஒற்றுமையா கையப் பிடிச்சு எழும்பி நிக்க வேணும். ”நாய்பிடி பூனைபிடி” எண்டு கொழுவிக் கொண்டு திரியாமல், நாட்டுக்கு நாலு நல்லது நடக்குமெண்டா ஓடிப்போய் ஒற்றுமையா நிண்டு ஒப்பேத்தவேணும் கண்டியளோ! ஆளாளுக்கு அங்கனை இங்கனையெண்டு, தனித்தனிய நிண்டு மேளச்சமா வைக்காமல், ஒண்டா நிண்டமெண்டா ஒரு பயல் கிட்ட வரமாட்டான்.
முடியும் பிள்ளையள். முடியும். எங்களாலை முடியாதெண்டு ஒண்டுமில்லை, இந்த உலகத்திலை. மனசு வைச்சு இறங்குங்கோ. ஊர், உலகத்திலை இருக்கிறவை எல்லாருக்கும் தான் சொல்லிறன். விளங்குது தானே!
#உழவாரப்_பொன்னையா#